இந்த பதிவில் தாமஸ் ஆல்வா எடிசன்,அவர்களுடைய வரிகளை தான் நாம் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி, மிக முக்கியமான விஷயத்தை பார்த்துவிட்டு அவர்கள் வரிகளுக்குள் போய்விடலாம்.
LEADER OF INNOVATION
கண்டுபிடிப்புகளின் தலைவன், என்று அழைக்கப்படுபவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் கண்டுபிடித்தது ஒன்றிரண்டு கண்டுபிடிப்புகள் அல்ல,1330 கண்டுபிடிப்புகள். சாதனைகளைக் கொண்டே, சாதனை படைத்த மனிதன். 11 நாட்களுக்கு ஒரு கண்டுபிடிப்பு, 3 மாதத்துக்கு ஒரு கண்டுபிடிப்பு, ஆறுமதத்திற்கு ஒரு கண்டுபிடிப்பு என்று, தன் இலக்குகளை வைத்துக் கொண்டு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அடக்கயவர், கண்டுபிடிப்புகளின் தலைவன் என்று அழைக்கப்படும் தாமஸ் ஆல்வா எடிசன்.
தாமஸ் ஆல்வா எடிசனின் ஆசிரியர் எழுதிய கடிதமும், தாமஸ் ஆல்வா எடிசனின் தாயின் அன்பும்.
ஒரு நாள் தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியை முடித்து விட்டு தன் வீட்டுக்கு திரும்பும்போது அன்று தன் ஆசிரியர் அவருக்கு கொடுத்த ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு தன் தாயிடம் ( NANCY MATTHEWS ELLIOTT ) வந்தார் அம்மா இது என் ஆசிரியர் இதை நான் பிரித்து படிக்காமல் உன்னிடம் மட்டுமே கொடுக்கச் சொன்னார் என்றார், அதை படித்த தாமஸ் ஆல்வா எடிசனின் தாய் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது கண்ணீரைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் ஏன் என்று கேட்டார் உன் ஆசிரியர் நீ சிறந்த அறிவாற்றல் கொண்டவனாக இருக்கிறாய் இவனுக்கு ஈடு இந்த பள்ளி இல்லை என்றும் உனக்கு வேறு ஒரு சிறந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்குமாறு, கேட்டுக் கொண்டிருந்தார் என்று தாமஸ் (ஆல்வயா) சொன்னார் அவர் தாய் இதைக்கேட்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் மிக சந்தோஷம் அடைந்தார், அதற்குப் பிறகு தாமஸ் ஆல்வா எடிசனின் தாயே அவருக்கு ஆசிரியராக ஆகி வீட்டிலேயே கல்வி கற்கத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். பல வருடங்கள் கழிந்தன. தன் தாய் இறந்த பிறகு தான் சிறுவயதில் அந்த ஆசிரியர் கொடுத்த கடிதத்தை தாமஸ் ஆல்வா எடிசன் படிக்க நேர்ந்தது அந்தக் கடிதத்தைப் படித்த தாமஸ் ஆல்வா எடிசனின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது அதில் எழுதப்பட்டிருந்தது உங்கள் மகன் தாமஸ் ஆல்வா எடிசன் மனநிலை சரியில்லாதவன் போல தோன்றுகிறது அவனை மனநிலை சரியில்லாத காப்பகத்தில் சேர்க்குமாறு இனி அவனை இந்தப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.
ஒரு யோசனையை உருவாக்கும் ஒவ்வொரு மனிதனும், அதை சாத்தியமற்றதாகத் தோன்றும் வரை வேலை செய்கிறான், பின்னர் அவன் சோர்வடைகிறான். அது சோர்வடைய வேண்டிய இடம் அல்ல.
எத்தனை சோதனை வந்தாலும் என் சோதனையை நான் விடுவதாக இல்லை.
என்ன நடந்தாலும் எதை இழந்தாலும், நான் சோர்ந்து போகமாட்டேன், ஏனென்றால் நான் நூறு வெற்றிகளை மட்டும் பார்த்தவன் அல்ல, அந்த நூறில் 1000 தோல்விகளை பார்த்தவன்.
மனிதனே, நான் நிறைய முடிவுகளைப் பெற்றுள்ளேன். வேலை செய்யாத பல ஆயிரம் விஷயங்கள் எனக்குத் தெரியும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும், பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு, ஒரு நாள் எல்லாம் அவரைத் தேடி வரும்.
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி.