THOMAS ALVA EDISON GREAT TAMIL QUOTES
THOMAS ALVA EDISON GREAT TAMIL QUOTES

THOMAS ALVA EDISON GREAT TAMIL QUOTES

22,THOMAS ALVA EDISON TAMIL QUOTES.

இந்த பதிவில் தாமஸ் ஆல்வா எடிசன்,அவர்களுடைய வரிகளை தான் நாம் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி, மிக முக்கியமான விஷயத்தை பார்த்துவிட்டு அவர்கள் வரிகளுக்குள் போய்விடலாம்.

LEADER OF INNOVATION

கண்டுபிடிப்புகளின் தலைவன், என்று அழைக்கப்படுபவர் தாமஸ் ஆல்வா எடிசன். இவர் கண்டுபிடித்தது ஒன்றிரண்டு கண்டுபிடிப்புகள் அல்ல,1330 கண்டுபிடிப்புகள். சாதனைகளைக் கொண்டே, சாதனை படைத்த மனிதன். 11 நாட்களுக்கு ஒரு கண்டுபிடிப்பு, 3 மாதத்துக்கு ஒரு கண்டுபிடிப்பு, ஆறுமதத்திற்கு ஒரு கண்டுபிடிப்பு என்று, தன் இலக்குகளை வைத்துக் கொண்டு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அடக்கயவர், கண்டுபிடிப்புகளின் தலைவன் என்று அழைக்கப்படும் தாமஸ் ஆல்வா எடிசன்.

தாமஸ் ஆல்வா எடிசனின் ஆசிரியர் எழுதிய கடிதமும், தாமஸ் ஆல்வா எடிசனின் தாயின் அன்பும்.

ஒரு நாள் தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியை முடித்து விட்டு தன் வீட்டுக்கு திரும்பும்போது அன்று தன் ஆசிரியர் அவருக்கு கொடுத்த ஒரு கடிதத்தை எடுத்துக்கொண்டு தன் தாயிடம் ( NANCY MATTHEWS ELLIOTT ) வந்தார் அம்மா இது என் ஆசிரியர் இதை நான் பிரித்து படிக்காமல் உன்னிடம் மட்டுமே கொடுக்கச் சொன்னார் என்றார், அதை படித்த தாமஸ் ஆல்வா எடிசனின் தாய் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது கண்ணீரைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் ஏன் என்று கேட்டார் உன் ஆசிரியர் நீ சிறந்த அறிவாற்றல் கொண்டவனாக இருக்கிறாய் இவனுக்கு ஈடு இந்த பள்ளி இல்லை என்றும் உனக்கு வேறு ஒரு சிறந்த பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்குமாறு, கேட்டுக் கொண்டிருந்தார் என்று தாமஸ் (ஆல்வயா) சொன்னார் அவர் தாய் இதைக்கேட்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் மிக சந்தோஷம் அடைந்தார், அதற்குப் பிறகு தாமஸ் ஆல்வா எடிசனின் தாயே அவருக்கு ஆசிரியராக ஆகி வீட்டிலேயே கல்வி கற்கத் தொடங்கினார் தாமஸ் ஆல்வா எடிசன். பல வருடங்கள் கழிந்தன. தன் தாய் இறந்த பிறகு தான் சிறுவயதில் அந்த ஆசிரியர் கொடுத்த கடிதத்தை தாமஸ் ஆல்வா எடிசன் படிக்க நேர்ந்தது அந்தக் கடிதத்தைப் படித்த தாமஸ் ஆல்வா எடிசனின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியது அதில் எழுதப்பட்டிருந்தது உங்கள் மகன் தாமஸ் ஆல்வா எடிசன் மனநிலை சரியில்லாதவன் போல தோன்றுகிறது அவனை மனநிலை சரியில்லாத காப்பகத்தில் சேர்க்குமாறு இனி அவனை இந்தப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

6,Never Give up Thomas Alva Edison Tamil Quotes.

thomas alva edison great tamil quotes
  • விட்டுக் கொடுப்பதில் நமது மிகப்பெரிய பலவீனம் உள்ளது, வெற்றி பெற மிகவும் உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒருமுறை முயற்சிப்பது தான்.
  • வெற்றிக்கான முதல் தேவை உங்கள் உடல் மற்றும் மன ஆற்றல்களை ஒரு பிரச்சனைக்கு இடைவிடாமல், சோர்வடையாமல், பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
  • மதிப்புள்ள எதையும் அடைய மூன்று பெரிய அத்தியாவசியங்கள். கடின உழைப்பு, அதில் ஒட்டிக்கொள்வது மற்றும் பொது அறிவு.
  • ஒரு யோசனையை உருவாக்கும் ஒவ்வொரு மனிதனும், அதை சாத்தியமற்றதாகத் தோன்றும் வரை வேலை செய்கிறான், பின்னர் அவன் சோர்வடைகிறான். அது சோர்வடைய வேண்டிய இடம் அல்ல.
  • எத்தனை சோதனை வந்தாலும் என் சோதனையை நான் விடுவதாக இல்லை.
  • வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்தவர்கள், தங்கள் எடுத்த செயல்களை கைவிட்ட போது, அவர்கள் வெற்றிக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை, உணராதவர்கள்.

3,VALUE OF FAILURES THOMAS ALVA EDISON TAMIL QUOTES.

  • என்ன நடந்தாலும் எதை இழந்தாலும், நான் சோர்ந்து போகமாட்டேன், ஏனென்றால் நான் நூறு வெற்றிகளை மட்டும் பார்த்தவன் அல்ல, அந்த நூறில் 1000 தோல்விகளை பார்த்தவன்.
  • மனிதனே, நான் நிறைய முடிவுகளைப் பெற்றுள்ளேன். வேலை செய்யாத பல ஆயிரம் விஷயங்கள் எனக்குத் தெரியும்.
  • நான் தோல்வியடையவில்லை வேலை செய்யாத 10,000 வழிகளை நான் இப்போது கண்டுபிடித்துள்ளேன்.

5,Thoughts of Thomas Alva Edison Tamil quotes.

  • நம் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்திருந்தால், நாம் உண்மையில் நம்மை ஆச்சிரியப்படுத்துவோம்.
  • சில சமயங்களில் முட்டாள் போல காட்சியளிப்பது ஒரு புத்திசாலித்தனம் ஆகும்.
  • ஆழ்ந்த சிந்தனை, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கும்.
  • கண்டுபிடிக்க, உங்களுக்கு ஒரு நல்ல கற்பனை மற்றும், குப்பைக் குவியல் தேவை.
  • உங்கள் மதிப்பு நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் உள்ளது, உங்களிடம் என்ன உள்ளது என்பதில் அல்ல.

6,Process Thomas Alva Edison Tamil quotes.

  • சிறந்த சிந்தனை தனிமையில் செய்யப்பட்டுள்ளது.
  • ஒரு யோசனையின் மதிப்பு, அதை பயன்படுத்துவதில் உள்ளது.
  • சிறந்த யோசனைகள், தசைகளில் உருவாகின்றன.
  • நான் ஒரு போதும் தற்செயலாக எதையும் செய்யவில்லை, என் கண்டுபிடிப்புகள் எதுவும், தற்செயலாக வரவில்லை.
  • புத்திசாலித்தனம் 1 சதவிகிதமும், உத்வேகம் மற்றும் வியர்வை, 99 சதவிகிதம்.
  • கடின உழைப்புக்கு மாற்று இல்லை.

2,Believe of Thomas Alva Edison Tamil quotes.

  • உலகம் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பே, எனது மிகப்பெரிய இன்பத்தையும், அதனால் எனக்கு கிடைத்த வெகுமதியையும் நான் காண்கிறேன்.
  • எந்த ஒரு சூழ்நிலையிலும், பொறுமையாக காத்திருப்பவர்களுக்கு, ஒரு நாள் எல்லாம் அவரைத் தேடி வரும்.
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி.
What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *