*முதலில் அவர்கள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள் ,பின்னேர் அவர்கள் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள் பின்னர் அவர்கள் உங்களுடன் சண்டையிடுகிறார்கள் பிறகு நீங்கள் வெல்வீர்கள்.
ஒருவரின் சுய மரியாதையை இழப்பதை விட பெரிய இழப்பை என்னால் வேற எதுவும் கருத முடியாது.
கோபமும் சகிப்பின்மையும் சரியான புரிதலின் எதிரிகள்.
நிராயுதபாணியாக இறக்கத் துணிந்த ஒரு மனிதன் வலிமையான சிப்பாய் என்று நான் நம்புகிறேன்.
நேர்மையான கருத்து வேறுபாடு பெரும்பாலும் முன்னேற்றத்தின் ஒரு நல்ல அறிகுறியாகும் .
ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்ய பூமி போதுமானது, ஆனால் ஒவ்வொரு மனிதனின் பேராசைக்கும் அல்ல.
நீங்கள் கேட்கவில்லை என்றால்,நீங்கள் அதைப் பெறமுடியாது.
செயல்கள் முன்னுரிமைகளை வெளிப்படுத்கிறது.
நல்ல மனிதன் எல்லா உய்ரினங்களுக்கும் நண்பன்.
THE SINGLE MAN MAKE A DIFFERENCE, LIFE CHANGING BOOKS
படித்ததில் பிடித்தவை
வெற்றியை இலக்காகக் கொண்டு அதிலேயே நம் பயணம் செல்லும்போது அதைத் தவற விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அதில் பயணிக்கும் போது வெற்றியை தேடி போக வேண்டியதில்லை வெற்றி நம்மைத் தேடி வந்து விடும்.
மகாத்மா காந்தியை பற்றி, ஒரு சிறிய முன்னுரியை பார்த்துவிட்டு, அவரோட வரிகளுக்குள் போயிடலாம்.
அமெரிக்கா பார்லிமென்டில் காந்தியுடைய புகைப்படத்துக்கு கீழே பிறப்பு 2 அக்டோபர் 1869 என்றும், இறப்பு 30 ஜனவரி 1948 என்றும், இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர், இந்தியாவின் தேசப்பிதா என்றும் எழுதப்படவில்லை. மாறாக, THE SINGLE MAN MAKE A DIFFERENCE ஒரு தனிமனிதனால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்று காந்திக்கு சரியாக பொருந்தக்கூடிய வரிகள் தான் அது. நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு காந்தியுடைய அகிம்சை என்ற மிகவும் பலம் வாய்ந்த ஆயுதத்திற்கு ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு.
மவுண்ட்பேட்டன் பிரபு
காந்தியைப் பற்றி படிக்கும் போது ஒரு சுவாரசியமான விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. நம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தே ஆக வேண்டும் என்கிற ஒரு சூழல் வரும்போது பிரிட்டிஷ் மேலதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இந்தியர்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் அளவுக்கு நீங்கள் ஏன் அவர்களை வளர விட்டீர்கள் நம்மிடம் ஆயுதங்கள் இல்லையா இல்லை போர்வீரர்கள் இல்லையா. அதற்கு மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்து வந்த பதில். அவர்கள் எல்லோரும் ஒன்று திரண்டு நம்மைத் தாக்க வந்திருந்தாள் சிப்பாய் படைகளைக் கொண்டு அவர்களை நான் வீழ்த்திருப்பேன். ஆயுதங்களைக் கொண்டு நம்மை தாக்க வந்திருந்தால் நான் பீரங்கி கொண்ட படையை கொண்டு அவர்களை வீழ்த்தி இருப்பேன்.ஆனால், இந்தியர்கள் அகிம்சை மற்றும் உண்மையைக் கொண்டு போராடுகிறார்கள், அதனால் என்னால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை அவர்கள் சொல்வது இது எங்கள் நாடு இதே விஷயத்தை பல அரசர்களும் வீரர்களும் சொல்லியிருந்தாலும் அகிம்சை முறையில் சொல்லப்பட்டது பிரிட்டிஷ்காரர்களின் உள்ளத்தில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் சத்தமாக ஒலித்தது அந்த அகிம்சை.
மகாத்மா காந்தியை பற்றி பல முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அது இக்காலத்தில் அவர் வாழும்போது இருந்தே அது இருக்கத்தான் செய்கிறது. இந்துக்களில் சிலர் காந்தி இஸ்லாமியர்களுக்கு இணங்கி இருக்கிறார் என்றும், இஸ்லாமியர்களில் சிலர் இவர் இந்துக்களுக்கு சாதகமாக பேசுகிறார் என்றும், இவர்களில் இல்லாத மற்றொரு குழுவினர்கள் இவர் பிரிட்டிஷ் காரருக்கு சாதகமாக பேசுகிறார் என்றும், பல முரண்பாடுகள் உள்ளது. இதற்கான காரணங்கள் என்னவென்றால் இவர் வேறு யாருடைய வழிகளிலும் இல்லை மகாத்மா காந்தி அகிம்சையும் சத்தியமும் என்ற இரண்டு வழிகளில் மட்டுமே பயணித்தார். அதனால் தான் இந்த சிலர்களைத் தவிர மற்ற பல மனிதர்களின் உள்ளங்களில் மகாத்மாவாக வாழ்கிறார்.
சத்திய வழியில் மகாத்மா காந்திக்கு இந்த சத்தியத்தின் மீதும் உண்மையின் மீதும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்தது அரிச்சந்திரன் என்ற ஒரு சிறு நாடகம்தான். ஒரு சிறு நாடகம் ஒரு நாட்டிற்கு மிகப்பெரிய மகாத்மாவை கொடுத்திருக்கிறது. மகாத்மா அவர்களின் வரிகளைத்தான் நாம் கீழே பார்க்க இருக்கிறோம். மிகவும் சக்திவாய்ந்த அவருடைய வரிகளை நம் உள்ளங்களிலும் நம் வாழ்க்கையிலும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் மற்றும் ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். வரிகளுக்குள் போகலாம்.
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் இந்த வரிகளால் உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை கீழே உள்ள உணர்வுகள் வெளிப்படுத்தும் பட்டன்கள் இன் மூலம் மற்றும் கமெண்ட் இன் மூலம் வெளிப்படுத்துங்கள் நன்றி.