இந்த பதிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வரிகளை பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக ஆப்ரஹாம் லிங்கனின் வரலாறுகளை படிக்கும்போது, எனக்கு பிடித்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன், அது உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கையில்.
ஆப்ரஹாம் லிங்கனின் நிதானமும், அவர் உள்ளமும்
ஆப்ரஹாம் லிங்கனை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்ட ஒரு மனிதன், ஒரு சபையில் ஆபிரஹாம் லிங்கனின், மிகச்சிறந்த பேச்சுக்கு இடையே, அந்த மனிதன் ஆப்ரஹாம் லிங்கனை பார்த்து, நீ மிகவும் பெருமைக்குரியவன் இல்லை, உன் தந்தை தைத்து தந்த செருப்பு, இன்னும் என் கால்களில் கீழே உள்ளது என்பதை மறந்து விடாதே என்றார். அதற்கு ஆப்ரஹாம் லிங்கன், என் தந்தை இறந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டன ஆனால் அவர் உழைப்பினால் செய்த அந்த செருப்பு, இன்னும் உங்கள் கால்களில் உள்ளது. அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை, அதில் இப்போது ஏதாவது கிழிந்து இருந்தால், அதை என்னிடம் கொடுங்கள், நான் அதை தைத்து தருகிறேன் என்றார் ஆப்ரஹாம் லிங்கன். எப்போதும் எல்லா மனிதர்களிலும் வேலைகளிலும் ஏற்றத்தாழ்வு பார்க்காத உள்ளம் கொண்ட மனிதன்.
புத்தகத்தின் மீது அவர் வைத்திருந்த காதல்.
புத்தகம் என்பது ஆபிரஹாம் லிங்கன் வாழும் காலத்தில் ஏழ்மை குடும்பத்தாருக்கு புத்தகம் வாங்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. புத்தகம் படிப்பதன் மீது மிக அதிகம் ஆர்வம் கொண்ட ஆபிரஹாம் லிங்கன், பல கிலோமீட்டர்கள் தாண்டி ஒரு மனிதரிடம் ஒரு புத்தகம் இருப்பதாக கேள்விப்பட்டு ஆப்ரஹாம் லிங்கன் அவரிடம் சென்று மூன்று நாட்களுக்கு அந்த புத்தகத்தை கடன் கேட்டார் அந்த மனிதனும் ஆபிரகாம் லிங்கனுக்கு அந்த புத்தகத்தை மூன்று நாட்களுக்கு கொடுத்துவிட்டார், அதை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய் படிக்கத் தொடங்கினார் ஆபிரஹாம் லிங்கன் அந்த புத்தகத்தை சிறு பக்கம் படித்துவிட்டு அவர் வீட்டின் கூரையின் மீது வைப்பது அவருடைய பழக்கம் ஒருநாள் மழையின் காரணமாக ஆப்ரஹாம் லிங்கனின் ஒரு புறம் இருந்த வீட்டுச் சுவர் கீழே விழுந்தது அந்த புத்தகத்தின் பக்கங்கள் எல்லாம் மழையில் நனைந்து வீங்கிப் போய் விட்டன அதைக் கொண்டுபோய் அந்த புத்தகத்தை வாங்கிய மனிதரிடம் கொடுக்கும்போது அந்த மனிதன் அந்த புத்தகத்தை வாங்க மறுத்து விட்டான் எனக்கு புதிதாக இல்லை எனில் இதற்கு விலையை எனக்குக் கொடுத்து விடு. ஆபிரகாம் லிங்கன் அதற்கான வசதி என்னிடம் இல்லை என்று கூறினார் சரி அப்போது நான் சொல்லும் ஒரு வேலையை செய்கிறாயா என்று கேட்டார். என்ன வேலை என்று ஆப்ரஹாம் லிங்கன் கேட்க என் நிலத்தை உழும் ஒரு குதிரை இறந்து விட்டது அதற்கு பதிலாக அந்த நிலத்தை நீ எனக்கு உழுது தரவேண்டும் என்று கேட்டார் சரி நான் அதை உழுது தருகிறேன், அதற்கு பதிலாக அந்த நினைந்த புத்தகத்தை எனக்கு தருவீர்களா என்று கேட்டார் அந்த மனிதன் சரி என்று சொன்னதும் மூன்று நாட்கள் அந்த மனிதனின் நிலத்தில் ஒரு புறம் குதிரையும் ஒரு புறம் ஆபிரகாம் லிங்கனும் சேர்ந்து, அந்த நிலத்தை உழுது அந்த புத்தகத்தை வாங்கிப் படித்தார் ஆப்ரஹாம் லிங்கன். புத்தகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையும், காதலும் கொண்டிருந்தார், ஆபிரஹாம் லிங்கன்.
இன்று தவிர்க்க படுவதன் மூலம் நாளைய பொறுப்பிலிருந்து நீங்கள் தப்ப முடியாது.
நான் இன்று ஒரு வெற்றியைப் பெற்றேன் ஏனென்றால் என்னை நம்பும் ஒரு நண்பர் எனக்கு இருந்தார் மேலும் அவரை வீழ்த்த எனக்கு இதயம் இல்லை.
நான் வெல்ல வேண்டியதில்லை ஆனால் நான் உண்மையாக இருக்க வேண்டும் நான் வெற்றி பெற வேண்டியதில்லை ஆனால் எனக்கு என்ன வெளிச்சம் இருக்கிறது என்பதை நான் கண்டுபிடிக்கிறேன்.
என் தாத்தா யார் என்று எனக்குத் தெரியாது, அவரது பேரன் என்னவாக இருப்பார் என்பதை அறிந்து கொள்வதில், நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன்.
நான் மக்களுடன் பேச தயாரானதும் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை அவர்கள் கேட்க விரும்புவதையும் மூன்றில் ஒரு பங்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை பற்றியும் சிந்திக்கிறேன்.
இன்று செய்யக்கூடியவை நாளைக்கான எதையும் இன்று விட்டுவிடக் கூடாது.
நீங்கள் எல்லா மக்களையும் சில நேரத்தில் சிலரை எல்லா நேரத்திலும் முட்டாளாக்கலாம் ஆனால் எல்லா மக்களையும் நீங்கள் எப்போதும் முட்டாளாக்க முடியாது.
GREAT BOOKS FOR YOU
படித்ததில் பிடித்தவை
நம்மிடம் எல்லாவிதமான ஆற்றல்களும் உள்ளன அது தான் நம்முடைய ஆளுமை நம்முடைய புனிதமான மனித இயற்கையின் அடையாழத்தில் மறைந்து கிடக்கும் நம்முடைய கடவுளின் எல்லையில்லாத உன்னதத் தன்மையை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு அதை பயன்படுத்த வேண்டும்.