தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுடைய வரிகளை தன், இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக, அவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான, சுவாரசியமான, சிறுசிறு சம்பவங்களை பார்த்துவிட்டு, அவர்களுடைய வரிகளுக்குள் போய்விடலாம். நிச்சயமாக இது உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
நிறவெறி, தேச துரோகி.
வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் கருப்பினத்தவர்கள் அடிமையானவர்கள் என்று கருத்துக்கு, எதிராகப் போராடிய மனிதன், அதற்காக தேச துரோகி என்று அழைக்கப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம். நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்யுங்கள் என்று பல ஆண்டுகளாக வெளியில், போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அந்நேரத்தில் நெல்சன் மண்டேலாவின் மகன் கார் விபத்தில் இறந்து போனார், அந்த நேரத்தில் அரசாங்கத்தில் இருந்து ஒரு செய்தி வந்தது. நெல்சன் மண்டேலா அவர்கள் மன்னிப்பு கேட்டாள், அவரை விடுதலை செய்வோம் என்றனர். தன் மகன் முகத்தைக்கூட கடைசியாக பார்க்க முடியாமல் போனாலும், நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் கேட்டது எங்கள் உரிமையை தானே என்ற, ஆழமான தன் உயர்ந்த கொள்கைகளை, இருக்கமாக பிடித்துக் கொண்டிருந்தார்.
அதிபர் ஆனதும் அவர் பேசிய மேடைப்பேச்சு.
நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கருப்பின அதிபர் ஆனார். அவர் பதவி ஏற்கும் விழாவை, உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அவர் பேசிய பேச்சுக்கள். காயங்கள் ஆற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது, என்றார். இதைக் கேட்டதும், கருப்பினத்தவர் எல்லோர் கண்களிலும், அந்த பழைய வழிகளில் ஏற்பட்ட, கண்ணீர் வந்தது.
உண்மையான ஜனநாயக அரசியல் தலைவர்.
அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருக்கும் போதே, பதவியை விட்டு விலகியவர். மற்றவருக்காக வழி விட்டவர். ஒரே நபர் அதிகமுறை அரசியல் தலைவராக இருப்பது, ஜனநாயகத்துக்கு சரியில்லை என்ற, சரியான, உண்மையான, ஜனநாயகத்தை புரிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து காட்டிய தலைவர்.
இந்தியாவும், நெல்சன் மண்டேலாவும்.
கருப்பு காந்தி என்று அழைக்கப்படுபவர் நெல்சன் மண்டேலா. மகாத்மா காந்தியின் அகிம்சை மீது, அதிக பற்று கொண்ட மனிதன். இந்தியாவையும், தன் நாட்டையும், எப்போதும் பிரித்து பார்க்காமல் இந்தியாவைத் தன் நாடாகவே எண்ணிக்கொண்டிருந்த மனிதன்.
1990, இந்தியாவின் மிக உயர்ந்த விருது ஆன, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது, இந்தியர்களுக்கு இல்லாமல், ஒருவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்றால், அது நெல்சன் மண்டேலா ஒருவருக்கு மட்டுமே.
அதை அடுத்து 1993 அன்று, உலக அமைதிக்காக நோபல் பரிசை வென்றார்.
ஹோட்டல் கதையும், சமாதானம்.
ஒருநாள் நெல்சன் மண்டேலா அதிபராக இருக்கும் போது, உணவு அருந்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அவர் பாதுகாவலர்களுடன் போயிருந்தார். அப்போது அவர் உணவு உண்ணும் இடத்திற்கு அருகில், இன்னொரு மனிதன் தனியாக பதட்டத்துடன் உணவு உட்கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் நெல்சன் மண்டேலா, அவரை என்னுடன் சேர்ந்து உணவு அருந்த வைக்குமாறு தன் பாதுகாவலர்கள் இடம் சொன்னார், அவர்களும் அந்த மனிதனை அழைத்து இவருக்கு முன் அமரவைத்து உணவு அருந்த வைத்தனர். அந்த மனிதன் உணவு உட்கொள்ள முடியாமல் நடுக்கத்துடனும், பயத்துடனும், உணவு உண்ண தயங்கி கொண்டிருந்தார். இதைக் கண்டதும் நெல்சன் மண்டேலா அவர்களின் பாதுகாவலர்கள், ஒரு அதிபருடன் உட்கார்ந்து உணவு அருந்துவதற்கு அவர் பதட்டப் படுகிறார் என்று நினைக்கிறோம். அவரை தனியாகவே உட்கார வைத்தாள், நன்று சாப்பிடுவார் என்று நினைக்கிறோம் என்று, நெல்சன் மண்டேலாவின் பாதுகாவலர்கள் அவரிடம் சொன்னார்கள். அதற்கு நெல்சன் மண்டேலா, இவர் பதட்டப் படுவதற்கு காரணம் இது அல்ல. நான் சிறையில் இருந்த காலகட்டத்தில், இவர் தான் என்னுடைய ஜெயிலர். என்னை தேவையே இன்றி பலமுறை என்னை அடித்தவர். நான் தாகத்திற்கு தண்ணீர் கேட்டதற்கு, சிறுநீரை ( urine ) எனக்கு கொடுத்த மனிதன். இதைக் கேட்டதும் அவர் பாதுகாவலர்கள், பின்பு இவரை ஏன் உங்களுடன் உட்காரவத்து உணவு அருந்த வைக்கிறீர்கள் என்றனர். அதற்கு நெல்சன் மண்டேலா, இவருக்கு அன்பும், அகிம்சையும், அழகானது என்பதை புரிய வைப்பதற்காக, என்னுடன் சேர்ந்து உணவருந்த வைக்கிறேன். அன்பும், அகிம்சையும், உலகத்தின் மிக அழகான ஒன்று என்றார்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெப்பத்தை அணைப்பது, முட்டாள்தனம்.
5-Hard Work Nelson Mandela Quotes In Tamil.
எங்கும் சுதந்திரம் எளிதாக கிடைப்பதில்லை. நாம் ஆசைகளின் மலையை அடைவதற்குள், நம்மில் பலர் மரண நிழலின் பள்ளத்தாக்கு வழியாக, மீண்டும் மீண்டும் செல்ல வேண்டியிருக்கும்.
ஒரு வெற்றியாளர், ஒருபோதும் கைவிடாத, ஒரு கனவு காண்பவர்.
அவர்களிடம் சகிப்புத் தன்மை அல்லது அர்ப்பணிப்பு இல்லாததால், தங்களிடம் இருந்ததைப் பெறவில்லை என்பதே உண்மை.
தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல ஆனால் பயத்தின் மேல்தான் வெற்றி என்பதை, நான் அறிந்தேன் துணிச்சலான மனிதர் பயப்படாதவர் அல்ல, ஆனால் அந்த பயத்தை வெல்பவர்.
8-Thoughts Of Nelson Mandela Quotes In Tamil.
ஒரு மனிதனுடன் அவர் புரிந்து கொள்ளும் மொழியில் பேசினால், அது அவரது தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவரது மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்.
நான் நோக்கி செல்லும் எதிர்காலத்தை, நான் விட்டுச் சென்ற கடந்த காலத்துடன், எந்த வகையில் ஒப்பிட முடியும், என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
சந்தோஷம், புகழ்ச்சி, பாராட்டு என்று வரும்போது, தலைவர்கள் மற்றவர்களை முன் நிறுத்துகிறார்கள். தியாகங்கள், உதவிகள், போராட்டங்கள் என்று வரும்போது, தலைவர்கள் முன் நிற்கிறார்கள்.
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே கொடுக்கப்பட்டுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும், BUTTON மூலமும், COMMENTS மூலமும், வெளிப்படுத்தலாம் நன்றி.