புத்தரின் இந்த வரிகள் எல்லாம், நம் உள்ளத்திற்கும், நம் வாழ்க்கைக்கும், மிகவும் நம்பிக்கை தரக்கடியதாகவும், நம் சிந்தனைகளிலும், நம் வாழ்க்கையிலும், புதிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
நேற்று நடந்தவற்றை உங்களால் மாற்ற முடியாது. நாளை நடப்பதை, தடுக்க முடியாது. இன்றைய பொழுதில், இக்கணம் வாழுங்கள், அதுதான் எல்லா துன்பங்களுக்கும் ஒரே தீர்வு.
இங்கே ஆள்பவன் இருக்கும் போதே, அதை ஆள வேண்டிய இன்னொருவன் உருவாகிறான்.
நேர்மை மிகவும் விலையுயர்ந்த பரிசு, மலிவானவர்களிடமிருந்து, அதை எதிர்பார்க்க வேண்டாம்.
புத்தரின் பொறுமை.
புத்தர் ஒரு முட்டாள். தியானம் என்று சொல்லி பல மாதங்களின் பொன்னான நேரத்தை, வீணடித்து கொண்டிருக்கிறார், என் இரு மகனையும் வேலை செய்யும் நோக்கத்தை விட்டு, தியானத்தின் மீது அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று, புத்தர் மீது அதிக கோபம் கொண்ட ஒரு மனிதர்.
ஒருநாள் புத்தர் ஒரு கிராமத்திற்கு நடுவில் கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் புத்தரின் சீடர்களும் புத்தரை சூழ்ந்து கொண்டிருந்த ஒரு நேரத்தில் . புத்தரிடம் அந்த மனிதன் வந்தான் அமைதியாக அவர் முன்பு உட்கார்ந்தார் அவர் மீது அளவு கடந்த கோபம் கொண்டிருந்த அந்த மனிதன் சட்டென்று புத்தரின் மீது எச்சிலைத் துப்பி விட்டார் ஆனால் புத்தரோ அந்த மனிதனைப் பார்த்து அழகிய புன்னகையை புன்னகைத்தார். அந்த மனிதன் இன்னும் இங்கு இருந்தால் அவரை அடித்து விடுவோம் என்று எண்ணி அங்கிருந்து கிளம்பி விட்டார் அங்கிருந்த சீடர்களும் அந்த கிராம மக்களும் கோபத்துடன் இருந்தாலும் புத்தரின் அந்த அமைதியும் அந்த புன்னகையும் கண்டவர்கள் கோபத்தை அடக்கிக் கொண்டு எதுவும் செய்யாமல் விட்டு விட்டார்கள்.
அன்றிரவு அந்த மனிதனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எச்சில் ஒரு மனிதனின் முகத்தில் துப்பிய பிறகும் எந்த ஒரு சலனமும் இல்லாத அவரிடம் இருந்து வெளிப்பட்ட அந்த அழகிய புன்னகை அவருக்கு தூக்கத்தை கொடுக்கவில்லை. மறுநாள் காலையில் எல்லோரும் சுற்றி இருக்கும் நேரத்தில் அந்த மனிதன் வந்து புத்தரிடம் மன்னிப்பு கேட்டார் அதற்கு புத்தரோ ஏன் என்னிடம் மன்னிப்பு கேட்கிறாய் என்றார் நேற்று இதே நேரத்தில் இவர்கள் எல்லோரும் முன்பும் உங்களை நான் துப்பினேன் அதற்காக என்றார் அதற்கு புத்தரோ நான் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் வாழ்வதில்லை எப்போதும் நிகழ்காலத்தில் தான் வாழ்கிறேன் இப்போது என் முன்பு ஒரு தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பாங்கு கொண்ட ஒரு உயர்ந்த மனிதர் முன்பு உட்கார்ந்து இருக்கிறேன் என்றார்.
அந்த நிகழ்வு புத்தரின் மனநிலையை எள்ளளவும் பாதிக்கவில்லை அந்த மனிதனின் உள்ளத்திலும் புத்தரை பார்க்கும்போதெல்லாம் நம் இப்படி செய்து விட்டோமே என்று எண்ணம் அவருக்கும் வராத அளவுக்கு ஒரு அழகான உண்மையை அழகான விதத்தில் அவருக்கு உணர்த்தினார் புத்தர்.
இந்த வரிகள் எல்லாம் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த வரிகள் படிக்கும்போது, உங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளை, கீழே உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் பட்டன் களிலும், கமெண்ட் பாக்ஸிலும், உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நன்றி.